30 Dec 2018

சமகாலத்தைப் பேச


எழுத்து என்பது சமகாலத்தைப் பேச வேண்டும் என்கிறார்கள். அதனால் சமகாலத்தைப் பேசுவதற்கு நாம் அதிக முக்கியதுவத்தைக் கொடுக்க வேண்டியதாகிறது.
முதலில் நெரிசலான ஒரு பேருந்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்தப் பேருந்தில் மனுசங்க கால் வைக்கவே இடம் இருக்காது. ஒருத்தர் கால் இன்னொருத்தர் மேல் இருக்கும். அப்புறம் அங்கே எப்படி இடம் இருக்கும். இடமே இல்லாத அந்த இடத்தில் எப்படி பாதை இருக்கும்? ஆனால் அதில் கண்டக்டர் அதில் பாதையைக் கண்டுபிடித்து போவார் பாருங்கள். ரொம்பவே ஆச்சரியமாக இருக்கும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள். கண்டக்டராக இருந்தால் எள் விழ முடியாத இடத்திலும் பாதை இருக்கும்.
பிள்ளைகளை அரசுப் பள்ளிகளை விட்டு தனியார் பள்ளிகளில் சேர்ப்பது ஒரு டிரெண்ட்டாக ஆகி விட்டது. இப்போது அந்த டிரெண்டும் போய் வெளிமாநிலங்களில் சேர்ப்பது பேஷனாக ஆகி விட்டது. அப்படி அனுப்பிய பிள்ளைகள் சில பிணமாகத் திரும்பிய கதைகள் திரும்பத் திரும்ப உலாவிய போதும் பிள்ளைகளை வெளிமாநிலத்துக்கு அனுப்புவது குறைந்தபாடில்லை. கிளையில் தொங்குற பலாக்காயை விட, கையில இருக்கற களாக்காய் மேல் என்பார்கள். உள்ளூரில் உயிரோடு படிப்பதை விட இந்தப் பெற்ற மனசுகளுக்கு வெளிமாநிலம் போய் பிணமாவது படிப்பது முக்கியமா இருக்கே.
ஆய்வு என்று அப்பாஸ் கழிவறைக்குள் நுழைந்த போதே ஆரம்பித்து விட்டது தமிழ்நாட்டைப் பிடித்த சோதனைக் காலம். அப்புறம் ஆய்வு என்று குளியலறைக்குள் நுழைந்ததெல்லாம் வரலாற்றுப் பதிவுகள். இனி ஆய்வுகள், சோதனைகள் என்பதெல்லாம் தமிழ்நாட்டின் ஆல் டைம் அட்ராசிட்டிகளுள் ஒன்றாகி விட்டது. சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்று சொல்வதற்குக் கூட முடியாமல் அந்த சாமி சிலையைக் கடத்துறாங்க பாருங்க பாஸ் அங்க நிற்குது நம்ம தமிழ்நாடு.
*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...