26 Nov 2018

மிக உயர்ந்த பாதை


மிக உயர்ந்த பாதை
வார்த்தைகள் உருவான பிறகு வார்த்தைகளே ஆயுதங்களாயின.

கருவிகளை, எந்திரங்களை, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வாழ்வை எளிமையாக்கிக் கொள்வதாக நினைக்கிறோம். வெறொரு புறத்திலிருந்து வாழ்வைக் கடினமாக்கிக் கொள்கிறோம்.

மிக உயர்ந்த பாதையில் செல்பவர் கீழானப் பாதையைத் தேர்வதில்லை. மிக உயர்ந்த பாதை என்பது பாதையற்ற பாதை.

தண்ணீருக்குப் பள்ளம்தான் பிடிக்கும்.
மேடுகளை விரும்பாது.
ஞானம் இன்மையில்தான் நிரம்புகிறது.
இருப்பு என்றும் நிரம்புவதில்லை.

குவளை, கிண்ணம், பாத்திரம் உள்ளீடற்றதே பயன்.
வாழ்க்கையும் அப்படித்தான்.
ஆசை உள்ளீடு. ஞானம் உள்ளீடற்றது.
*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...