19 Nov 2018

களவாடியப் பொழுதுகளின் கனங்கள்


களவாடியப் பொழுதுகளின் கனங்கள்
            வேலுச்சாமி ஐயாவுக்கு கொல்லையைப் பார்க்க மனசில்லை. அவரது நாற்பது வருஷ உழைப்பை கஜா புயல் கந்தக் கோலம் செய்திருந்தது. வேங்கை, தென்னை மரங்களைப் பாதிப் பாதியாக முறித்து போட்டு விட்டது. வாழை மரங்கள் சர்வ நாசம்.

            "எண்ணம் சரியில்லடா மனுசனுக்கு. இப்படிப் புயல் வரத்தான்டா செய்யும்!" என்கிறார் மாணிக்கம் தாத்தா.

            புயலுக்கு முந்தைய மாலைப் பொழுதில் பறவைகள் எதுவும் காணவில்லை. புயலுக்கு பிந்தைய இந்த மாலைப் பொழுதில் பறவைகளின் கீச்சொலிகள் எங்கும். காணாத வண்ணப் பறவைகள் மற்றும் சிறு சிறு பறவைகள் பல. எங்கிருந்து வந்தன இவைகள்? இவைகளின் கூடடையும் மரங்கள் எங்கேயோ முறிந்து கிடக்கக் கூடும்.

            புயலுக்குப் பின்னே நடந்த ஒரு நல்லது, பாட்டி - பேத்திச் சண்டையில் பேத்தி திட்டியதால் ஓராண்டுக்கு முன் கோபித்துக் கொண்டு போன வால்குருவி திரும்ப வந்தது.
*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...