25 May 2018

சில சாதனைச் சரித்திரங்களுக்கு...


கேள்விக்கு என்ன பதில்?
            முடிவே பதிலைத் தீர்மானிக்கிறது. மனம் பல நேரங்களில் முடிவை தன்னுள் இருத்தாமல் பதில் கூறிக் கொண்டு இருக்கும்.
            எப்படி பதில் அளிக்கப் போகிறோம் என்பது எதை விரும்புகிறோமோ அதைப் பொருத்ததாக அமைகிறது. விருப்பங்களின் சலனங்கள் மனதை அலைக்கழிக்கிறது. பல முட்டாள்தனமானப் பதில்களைச் சொல்வதற்குக் காரணமாக அந்த விருப்பங்களினால் ஏற்படும் சலனம் அமைகிறது.
            பதில்கள் பெரும்பாலும் இழந்து விடுவோமோ என்ற பயத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. அதனால்தான் பல நேரங்களில் பதில்கள் மழுப்பல்களாக அமைந்து விடுகிறது. ஆனால் இழப்பது நல்லது. இழப்பில் புதிய ஒன்று கண்டடையப்படுகிறது. இருப்பதை இழக்காமல் புதிய ஒன்றைக் கண்டடைவது முடியாது. கோப்பை மீண்டும் நிரம்ப அது காலியாக வேண்டும். இருக்கின்ற கோப்பையில் நிரப்ப நினைத்தால் அது வழிந்ததான் ஓடும்.
*****
சில சாதனைச் சரித்திரங்களுக்கு...
            கோபத்தை வெளிக்காட்டி அதன் மூலம் சில காரியங்களைச் சாதித்து விடலாம் என நினைக்கலாம். அதன் முடிவுகள் முட்டாள்தனமாகவே அமையும். கோபத்தால் செயலைச் சாதித்து இருந்தாலும் அதனால் எதிரிகளையும் சாம்பாதிக்க வேண்டியிருக்கும்.
            கோபப்பட்டுச் சொல்வதை அக்கறையாகச் சொல்வதாக யாரும் உணர்ந்து கொள்ள மாட்டார்கள். சம்பந்தம் இல்லாமல் கோபப்படுவதாகத்தான் நினைத்துக் கொள்வார்கள்.
            அவர்களின் விருப்பம் போல் இருப்பது அவர்களது உரிமை. அதில் குறுக்கிடுவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். தேவையில்லாமல் குறுக்கிட்டு அவர்களின் வெறுப்பைச் சம்பாதிக்கக் கூடாது.
            அது போன்ற விசயங்களில் உடனடியாக எதையும் சாதித்து விட முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச் சொல்லித்தான் எதையாவது சாதிக்க முடியும். அதுவும் நூறு சதவீத அளவுக்கெல்லாம் இல்லை. இருபது சதவீதம் சாதித்தால் கூட அது நூறு சதவீத அளவுக்குச் சமானம்.
*****

2 comments:

  1. ஐயா... உங்கள் பதிவுகளை தொடர்ந்து படிக்கிறேன். மிகவும் தத்துவார்த்தமாக உள்ளது.. அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது.. நன்றி!

    ReplyDelete

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...