28 Dec 2017

முதல் அதிகாரம்

குறளதிகாரம் - 1.1 - விகடபாரதி
முதல் அதிகாரம்
            திருக்குறளில் கடவுள் வாழ்த்து முதல் அதிகாரம்.
            கடவுள் வாழ்த்து என்றால் யார் கடவுள் போல் வாழ்ந்தார்களோ அவர்களை வாழ்த்துவது.
            யார் கடவுள் என்றால்...? அதற்கான விளக்கம் திருக்குறளில் வருகிறது,
            வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும் என கடவுளுக்கான விளக்கத்தை வரையறை செய்கிறார் வள்ளுவர்.
            கடவுள் வாழ்த்தை எழுத்தில் தொடங்குகிறார் வள்ளுவர். அம்மரபே எழுத்தறித்தவன் இறைவன் ஆகும் என்பதற்கு வித்தாகிறது.
            முதன்மைக்கு முதல் வணக்கம். அதுதான் முதல் குறளின் பொருள்.
            உங்கள் உலகுக்கு யார் முதன்மையானவரோ அவரை வணங்குங்கள்.
            அண்டமே பிண்டம், பிண்டம் அண்டம் என்பார்களே. அப்படி நீங்களே உலகம். உலகமே நீங்கள். உங்கள் உலகுக்கு யார் முதன்மையானவர் என்று கருதுகிறீர்களோ அவர்களை வணங்குங்கள்.
            வணக்கம்தான் வாழ்வு. வணங்கியவர்கள் வாழ்கிறார்கள். வணங்காதவர்கள் வீழ்கிறார்கள்.
            வணக்கத்தில் ஓர் இணக்கம் இருக்கிறது. மனித சமூகத்தோடு கொள்ளும் இணக்கம் அது. உலக வாழ்வுக்கு அவசியமான இணக்கம் அது.
            உங்கள் உலக வாழ்வுக்கு யார் யாரெல்லாம் அடிப்படையானவர்களோ அவர்களெல்லாம் முதன்மையானவர்கள். அவர்களை எல்லாம் வணங்குங்கள்.
            அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

*****

No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...