பூவை வெறுத்த பூவையர்கள்
ஒரு குடம்
தண்ணி ஊத்தி
ஒரு பூ பூத்துச்சாம்!
ரெண்டு குடம்
தண்ணி ஊத்தி
ரெண்டு பூ
பூத்துச்சாம்!
மூணு குடம்
தண்ணி ஊத்தி
மூணு பூ பூத்துச்சாம்!
பத்து ரூபாய்
கொடுத்து வாங்கி
ஒரு பூவுக்காக
ஒரு குடம்
தண்ணி ஊத்த
ஒரு ரூபாய்
கொடுத்து
ஒரு ப்ளாஸ்டிக்
பூவைச் சூடும்
எந்த மகராசிக்கும்
மனசு வராமல் போச்சுதாம்.
அந்த ஊர்ல
பூ பூக்குறதே
இல்லாமல் ஆச்சுதாம்.
*****
No comments:
Post a Comment