27 Apr 2017

ஒரு பாவமும் அறியாதவர்கள்


ஒரு பாவமும் அறியாதவர்கள்
குஞ்சு முகம் பார்க்க முடியாத
கோழியின் பாவங்களை
முட்டைகளாக
விழுங்கிக் கொண்டிருக்கிறோம்.

இனிமேல் இலைதழைகளைத்
தின்ன முடியாத
அறுத்த ஆட்டின் சதையை
வேக வைத்து
ருசித்துக் கொண்டிருக்கிறோம்.

வெட்டிப் போட்டு
குழம்பில் நீந்த விட்டு
மீன்களை
மென்று தின்று கொண்டிருக்கிறோம்.

ஒரு பாவமும் அறியாத
எனக்கு ஏன்
இத்தனை கொடுமைகள் பிதாவே
என்று
பிரார்த்தனையின் ஊடே
புகார் பத்திரத்தையும்
வாசித்து விட்டு
நல்லவர்களுக்கு வரும் சோதனை இது என்று
பெருமூச்சு விட்டுக் கொண்டு
வெளியேறிக் கொண்டிருக்கிறோம்,
சீக்கிரம் வீடடைந்தால்
வீடடையா காடையின் கறியைப்
பதம் பார்த்து தின்னலாம் என்ற ஆசையோடு.
*****

No comments:

Post a Comment

‘திரும்பிப் போ’வும் ‘வெளியே போ’வும் – காவாச் சொற்கள்!

‘திரும்பிப் போ’வும் ‘வெளியே போ’வும் – காவாச் சொற்கள்! அண்மைக் காலத்தில் எக்ஸ் தளத்தில் பரபரப்பான இரண்டு சொல்லாடல்கள் ‘திரும்பிப் போ’ என்பத...