15 Mar 2017

கனவு


முளை
கிளைகளைக் கழித்தவர்கள்,
வேர்களை வெட்டி வீழ்த்தியவர்கள்
விதைகளை இல்லாமல் செய்தவர்கள்
கொன்று புதைத்த இடத்தில்
மறுபடியும் முளை விடுகிறது
காதல் செடி.
*****

கனவு
டீச்சரைக் கண்டால் மிரளும்
அம்முக்குட்டியிடம் கேட்டேன்
ஒருநாள்,
"படிச்சு என்னவாகப் போறே?"
அம்முக்குட்டி சொன்னாள் ஆசை ஆசையாக
"டீச்சராகப் போகிறேன்!"
*****

No comments:

Post a Comment