பூர்வகுடிகளும், வந்தேறிகளும்
விரிவாக்கப்பட்ட
சாலையில்
வெட்டப்பட்ட
பனைமரத்தின்
அடியில்
நுங்கு
விற்றுக் கொண்டிருக்கிறான்
பூர்வகுடி!
ஏ.சி.
போட்டு
மேசை
நாற்காலிகள் விரித்து
கோலாவும்,
பீட்சாவும்,
பர்கரும்,
விற்றுக்
கொண்டிருக்கிறான்
வந்தேறி!
*****
நகர்வலம்
விழுந்து
புரண்டு
சாக்கடை
பூசிய
பன்றிகளோடு
நகர்ந்து
கொண்டு இருக்கிறது
சாயமும்
கிரீமும்
பூசிய
ஆடவர்களையும்,
அழகிகளையும்
இணைத்துக்
கொண்டு
விரையும்
நகரம்!
*****
பெருமகிழ்ச்சி
பெற்றப்
பொழுதினும்
பெருமகிழ்ச்சி
தாய்க்கு
மம்மி
என்றழைத்த
மழலைச்
சொல் கேட்டு!
*****
No comments:
Post a Comment