28 Oct 2024

பாதைகளின் சாசுவதங்கள்

பாதைகளின் சாசுவதங்கள்

யாரிடம் எதை நிறுவ

யாரிடம் எதைப் புரிந்து கொள்ளச் செய்ய

இக்கட்டான நேரங்களை எதிர்கொள்ள

ஆற்றுப்படுத்துவதா அறிவுரை சொல்வதா

கருத்துக் கூறுவதா விளக்கம் கேட்பதா

அமைதியாகக் கூறுவதைக் கேட்கின்ற வழியில்

பாதைகள் பயணிக்கத் தொடங்குகின்றன

பேசாமல் இருப்பது பேசுவதை விட

எவ்வளவு வலிமையாக இருக்கிறது

கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்வதைப் போல

எதிர்கொள்ளாமல் இருப்பது சிறந்த வழியாகிறது

தவறாகப் புரிந்து கொள்வதை

யார் என்ன செய்ய முடியும்

யார் தடுத்து நிறுத்த முடியும்

சரியாகப் புரிந்து கொள்ளுங்கள் என்று

எப்படி நிர்ப்பந்தம் செய்ய முடியும்

ஒவ்வொரு புரிதலும் அதற்கான

பிரத்யேகப் பாதைகளில் பயணித்துக் கொண்டிருக்கின்றன

பாதைகளை அடைக்க நினைப்பது தற்காலிகமானது

பயணிக்க விடுவதே சாசுவதமானது

*****

No comments:

Post a Comment

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...