22 Feb 2022

கடவுளின் குறிப்பு

கடவுளின் குறிப்பு

ஆமை புகுந்த வீடு விளங்காதென்றார்

வீட்டை உயர்த்திக் கட்டியிருந்தவர்

உயர்ந்து கொண்டே போன சாலைகளால்

தாழ்வான வீட்டில் குடியிருந்தவர்

ஆமைகள் வாழும் உலகத்தை வியப்போடு

மனக்கண்ணில் ஓடிவிட்டுக் கொண்டிருந்தார்

என்ன நினைத்தாரோ

ஆமைகளை வாழ விட்ட மனிதர்களுக்காக

மண்டியிட்டு கண்ணீர் மல்க நன்றி சொல்ல ஆரம்பித்து விட்டார்

உலகெங்கும் இருந்த ஆமைகளின் நெஞ்சில்

ஒரு சிலிர்ப்பு எழுந்து அடங்கியதாகக்

கடவுள் அப்போது குறித்துக் கொண்டார்

*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...