31 May 2017

கருணையைக் கொன்ற சிவப்பு


கேள்வி
வேளா வேளைக்கு
வயிறு முட்டச் சாப்பிடுபவன்
பசி என்றால் என்னவென்று கேட்பான்.
அவனுக்கு மேலும் மேலும் சோற்றைப் போட்டு
அது பற்றி விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கும்
டை கட்டி, ஷீ மாட்டி
முதுகு ஒடிய புத்தகம் சுமக்க வைக்கும்
அவன் கற்கும் காசு பிடுங்கிக் கல்வி.
*****

கருணையைக் கொன்ற சிவப்பு
அந்த சிக்னல்
இன்னும் கொஞ்சம்
கருணை காட்டி
சிவப்பு காட்டியிருக்கலாம்
பார்வையற்ற அந்த முதியவர்க்கு
ஒரு ஐந்து ரூபாய் நாணயம் விழுவதற்குள்
விழுந்து விட்டது மஞ்சளும்
அதைத் தொடர்ந்த பச்சையும்.
*****

No comments:

Post a Comment

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...