31 May 2017

கருணையைக் கொன்ற சிவப்பு


கேள்வி
வேளா வேளைக்கு
வயிறு முட்டச் சாப்பிடுபவன்
பசி என்றால் என்னவென்று கேட்பான்.
அவனுக்கு மேலும் மேலும் சோற்றைப் போட்டு
அது பற்றி விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கும்
டை கட்டி, ஷீ மாட்டி
முதுகு ஒடிய புத்தகம் சுமக்க வைக்கும்
அவன் கற்கும் காசு பிடுங்கிக் கல்வி.
*****

கருணையைக் கொன்ற சிவப்பு
அந்த சிக்னல்
இன்னும் கொஞ்சம்
கருணை காட்டி
சிவப்பு காட்டியிருக்கலாம்
பார்வையற்ற அந்த முதியவர்க்கு
ஒரு ஐந்து ரூபாய் நாணயம் விழுவதற்குள்
விழுந்து விட்டது மஞ்சளும்
அதைத் தொடர்ந்த பச்சையும்.
*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...